கடலில் மிதக்கும் படகின் சுழற்சியில்
காற்றில் அசைந்தும் தடுமாறாத நிலை…
திசை தெரியாதவர்க்கு வழி காட்டும்
நம்பிக்கையான இயற்கையின் திசைகாட்டி
மழையில் மங்கும் மண்ணுக்குள்
புவியின் இதயத்துடிப்பைக் கேட்டு…
வடதிசை பயணமின்றி நிமிரும் ஊசி
பலரின் பயணங்களுக்கு,
கொந்தளிக்கும் கடலுக்கும்,
காடு கடந்த குடிலுக்கும்,
பேசாத தோழனாய் …
வழி காட்டி மெளனமாய் நிற்கும்
அந்த இயற்கை திசைகாட்டி …
அதுதான்…
நம்பிக்கையின் சுழலும் நட்சத்திரம்
நா.பத்மாவதி
கொரட்டூர்
படம் பார்த்து கவி: கடலில்
previous post