படம் பார்த்து கவி: கதிரொளி

by admin 3
0 views

கதிரொளி கண்ட கனியே, பேரீச்சையே,
கருத்த மேனியிலே பொன் ஒளி வீசுதே.
தட்டின் அழகினிலே, கண்ணைக் கவருதே,
காண்பவர் நெஞ்சினிலே ஆசையை தூண்டுதே.
சக்திக்கு நீயே சிறந்த தோழனே,
சோர்வை நீக்கிடும் உன்னத உணவே.
நார்ச்சத்தில் நீதான் நிறைந்த பொக்கிஷம்,
நலம்தரும் உனக்கு நிகரில்லை நிச்சயம்.
இரும்புச்சத்து உன்னில் ஏராளமாய்,
இரத்த சோகையை நீக்கிடும் வல்லமை.
எலும்புகள் பலம்பெற துணை நிற்கும் நீ,
என்னே உன் சிறப்பு, பேரீச்சம் பழமே!
உழைக்கும் மேனிக்கு உற்சாகம் தருவாய்,
உளவியல் சோர்வை நொடியில் விரட்டுவாய்.
இறைவனின் கொடையாய் எம்மையும் வந்தாய்,
இனிப்பாய், சுவையாய், என்றும் நிலைப்பாய்.

இ.டி.ஹேமமாலினி .

You may also like

Leave a Comment

error: Content is protected !!