படம் பார்த்து கவி: சிதறிய

by admin 1
34 views

சிதறிய தேங்காவாய்
உடைந்து போனது
என் மனது
சொல்கின்ற காதலை
நிராகரிப்பது தவறில்லை
அவமதிப்பது தான்
ஆகச் சிறந்த பாவம்
முக்கண் உடைய
தேங்காயை உடைத்து
பத்தையாக்கி
சந்தைப்படுத்துவதை போல
பாவமேதும் செய்யாத
சாமானியனை
பார்வையாலயே
பாழ்யாக்கினாய்
பாவம் உனது
பழி எனதா?
உனக்காக
அந்த இரட்சகனை போல்
சிலுவைகளையும்
சுமந்து கொள்கிறேன்!

-லி.நௌஷாத் கான்-

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!