படம் பார்த்து கவி: தாலாட்டும்

by admin 1
25 views

தாலாட்டும் இசையே
இன்பத்தில் இன்றியமையாததும்
இயற்கை வரமழித்த வரப்பிரசாதமும்
வாழ்வில் கொட்டி கிடக்கும்
கோடி இன்பங்களுக்கு கை
கோர்த்து நிற்பது இசையன்றி
இவ்வையகமில்லை என்பது
ஏட்டில் இல்லா உண்மை,!
மறத்து போன பல இதயங்களுக்கு
நீயே மருந்தாகிறாய்,!
உன்னில் மயங்காத மனமில்லை,
உன் சிறையில் மீலா
செவிகளில்லை,!
உயிருள்ள மரமான உன்
உயிரை அருத்து
உயிரூட்டும் உயிரில் கலந்த
இசையை உலகிற்கே
அர்பணிக்கும் உன்னத படைப்பே,,,!!
நீ இன்றி என் இரவுகள்
தொடங்கியதில்லை,,,!!
உனை பற்றி வடித்ததில்
பேரானந்தம் கொள்கிறேன்.,,!!!

✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!