படம் பார்த்து கவி: தேங்காய்ப் பூ

by admin 1
26 views

தேங்காய்ப் பூ

சிதறிய தேங்காய்
சில்களுக்குள் சிறியதாக
ஓர் பூ

கடவுளுக்கு சமர்ப்பிக்க இல்லை
காதில் வைக்க இல்லை
மனம் மயக்கும் வாசமில்லை

உடலுக்கு நன்மை
ஊட்டத்துக்கு சிறந்தது
உவப்போடு உதவும்

தென்னையின் உள்ளில்
வெண் பூ
முளைத்த அதிசயத்தை
ஒரே அடியில்
உடைத்து சிதறும்படி
உளமார சொல்லும்
தேங்காய்

பத்மாவதி

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!