தேன் குடுவை
அகம் புறம் பளிங்கெனக் காட்டிடும்
கண்ணாடிக் குடுவையின்கண் தங்கமென
ஜொலித்திடும் தேன் … நீ எனக்குத் தான் …
சுற்றிச் சுற்றி ரீங்காரமிடும் ஈக்கள்….
இல்லையா பின்னே.. கோபத்தில் கொட்ட
வரும் தேனீக்கள் கண்டும் மலைத்திடாமல்
கூடு கலைத்தே மலைத் தேன்
சேகரித்திடும் சாகச மனிதர்கள்… ஆயினும்
இன்னா செய்தார்க்கும் அருமருந்தாய்.. கற்றுக்
கொள்வோம் நல்ல பாடந்தனை தேனீக்களிடம்….
நாபா.மீரா
படம் பார்த்து கவி: தேன் குடுவை
previous post