படம் பார்த்து கவி: நான்

by admin 3
15 views

நான் இருக்கிறேன் உனக்கு என
முதுமையின் காவலனாய் தலைநிமிர்ந்து
நிற்கும் கைத்தடி…ஏதோ ஓர்
பாரம் நெஞ்சில்….உயிரில்லாத் தடி
கொடுக்கும் நம்பிக்கை ஏன் உயிரும்
உணர்வும் நிறைந்திட்ட மனிதர் நம்மால்
இயலாமல் போயிற்றென… முதுமை எல்லாத்
தலைமுறைக்கும் பொது விதியே உணர்வோம்!
சாயத் தோள் கொடுப்போம்! ஆதரவாய்க்
கைப்பிடித்தே நடத்திச் செல்வோமே முதியோரை….

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!