படம் பார்த்து கவி: பொங்கல்

by admin 3
0 views

பொங்கல் திருநாளும், பொங்கும் உற்சாகமும்,
சேர்ந்தே வரும் எங்கள் ஜல்லிக்கட்டு!
பனை மரக் காட்டில், பஞ்சு போல் மேகம்,
மஞ்சள் பூசும் காளை, மணக்கும் மண்ணில்.
வெல்லத்தை வாயில், வீரத்தை நெஞ்சில்,
வாடிவாசலைத் தாண்டி, வருகிறது காளை.
துள்ளித் துள்ளிக் குதிக்கும், எங்கள் தமிழினம்,
பாரம்பரியம் காக்கும், எங்கள் ஜல்லிக்கட்டு!

இ.டி.ஹேமமாலினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!