படம் பார்த்து கவி: பொம்மை குழந்தை

by admin 1
23 views

பொம்மை குழந்தை

நீ எனக்கு குழந்தை
நான் உனக்கு குழந்தை
நமக்கு எதற்கு குழந்தை
கரடி பொம்மையை
குழந்தையாக நினைத்து
தேவன் என பெயர் சூட்டி
சுய படம் எடுத்து
உச்சி முகர்ந்து
உன் மடியில்
என் தோளில்
உறங்கச் செய்து
ஆறுதல் அடைய
கவலைப்படாதே கண்ணே
நமக்கும் மகன் பிறக்க
அவன் மழலையர் பள்ளியில்
டெடி பியர் பாட
நான் தமிழ் பற்றால்
கரடி மாமா கரடி மாமா
பாடச் சொல்ல
அவன் பொம்மையோடு
விளையாடி நம்மை
கட்டி அணைத்து
முத்தம் கொடுக்க
காத்திருப்போமே!

க.ரவீந்திரன்.

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!