படம் பார்த்து கவி: மார்கழி

by admin 1
26 views

மார்கழி மாதம்
அதிகாலை நேரம்
சிகரத்தின் சீதோதனம்
ரோஜா இதழ் மீது
தேன் உண்ட தேனீ
மதி மயங்கி கிடக்க
ரோஜா இதழ்
குவித்து அணைக்க

இதழ் மூடிய
மலருக்குள்
மகரந்தச்சேர்க்கை
கனியாய் பருவம் ஏற்க

கனிக்கு உருவம் கொடுக்க
கடவுளுக்கும் குழப்பம்
பார்வையாலே
ஸ்பரிசம் கொள்ளும்
செஞ்சிவப்பு வண்ணமுடன்
கூர் வடிவம் தானே
இச்சை உண்டு பண்ணும்

சர் கணேஷ்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!