படம் பார்த்து கவி: மூன்றாவது

by admin 3
12 views

மூன்றாவது கால்…
மனம் சொன்னதை சாப்பிட்டு
கிடைத்த தனிமையை ருசித்து
எதிர்பார்ப்பு  ஏமாற்றினாலும் இடிந்திடாமல்
சிரித்தபடி கடக்கும் முதுமைக்கு
மூன்று காலது எதற்கு??..
பேரன் பேத்தியோ  பெற்றபிள்ளைகளோ
துணையின்றி போனாள். என்ன
நம் மனதுண்டு அதில்
நமக்கென சிறுசிறு ஆசையுண்டு
முடிந்ததை செய்துக்கொண்டு பக்தியின்
துணைக்கொண்டு மகிழ்வாய் பயணிப்போம்
மூன்றாம் காலாய் கைத்தடி
வந்தால்கூட  ஊக்கம் குறையாது
தெளிவாய் நடைபோடலாம் காலம்
போடும்  கோலமது அழியும்வரை.
                                               

-மித்ரா சுதீன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!