படம் பார்த்து கவி: மெல்ல ஏறும்

by admin 1
26 views

மெல்ல ஏறும் விஷம்

இதுவரை காணாத தேசமது
இரும்பாலான துருப்பிடித்த
இதயம் காணத் துடிக்கும் பூமியது
வியர்வைத் துளியில் மின்னிடும்
ஏராளமான நட்சத்திரங்கள் அங்குண்டு
நிலாச் சோற்றை கூட
அந்த நிலவிலேயே உண்ணும்
பாக்கியத்தை பெறலாம்
பள்ள மேடு வாழ்க்கையது
புரிய வைக்கும் புதிர்கள் நிறைந்த
போதிமரம் இல்லாத புத்த மடம் அது
மனிதம் தொலைத்து
புனிதம் கடந்து
மாயநதியில் மூழ்கி
மூச்சடக்கி முத்தெடுத்து
முக்தியடைந்தால்
முற்றுப் பெறும் சொர்க்கமது
புத்தனுக்கு கூட ஆசை வரும்??
போதிமரத்துக்கு எப்படி வரும்??
கண் கொடுத்துப் பார்
கடவுளே
அவள் ஒற்றைத்துளி பார்வையில்
மெல்ல ஏறும் விஷம்!!

-நௌஷாத் கான்.லி –

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!