படம் பார்த்து கவி: வறுமையின்

by admin 3
9 views

வறுமையின் வாசலில்
ஓய்வின்றி இயங்கும் இயந்திரம்…
நூல்கண்டு
பூமியை போல் சுற்ற..
பல குடும்பத்தின்
வாழ்வும் ஓடுது இதனால்…
பூக்கள் பூத்த துகில்
உடலை மறைக்க…
மனதின் வலியை
பாதங்கள் கூறும்…
ஒரு புறம் தேனீர்
கோப்பை…
சோர்வு அகற்றும்
பானம்…
சூரிய ஒளி மெல்ல
படர…
வாழ்க்கையிலும்
ஒளி படறது மெதுவாய்.

திவ்யாஸ்ரீதர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!