படம் பார்த்து கவி: வாகை சூடும்

by admin 3
115 views

சிறகுகளை விரித்துப் பறக்கும்
பறவைகளின் எச்சத்திலிருத்து
விடுவிக்கப்பட்ட விதைக்கரு
எப்படியாவது மீண்டெழுந்துவிடலாமென
நம்பித்தான்
மண்ணை முத்தமிட்டது
விழுந்த கணமே
மறு பிழைப்பு மறுக்கப்பட
மண்வாசம் நுகர முடியாமல்
குன்றாய்க் குவிக்கப்பட்ட
குப்பைகளின் கைகளின் குடுவையுருத் தாவரத்தின்
உள் செலும் பூச்சியாய்
பரிதவித்து வீழும் நேரத்தில்
திடீரென முகிலின் தூறலில்
மண் வாசனையின் வாசத்தால்
சுவாசம் பெற்ற பின்
முளைத்து வளர முடியுமா?
கேள்விகளே வேள்வியாக
வதை பட்டாவது
வளர்ந்து விட வேண்டுமென
வெறிகொண்டு இடம் கண்டு
ஒழுகு நீர் நுணங்கறல் போல
நிலமதில் பாய்ந்து
மதிலாய் வேரமைத்து
குப்பைகளின் மையத்தில்
மையம் கொண்டு
மெது மெதுவாய்
உயிர் பெற
சுமக்கப்பட்ட சுமைகள்
எத்தனை?எத்தனை?
மண்மணம்
குப்பை மேடுகளால் மணமிழக்காவிடில்
விதைக்கப்படும்
விதைகளெல்லாம்
விருட்சப் பயணத்தில்
வாகை சூடும்!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!