வியர்வை நாற்றமோ, மணக்கும் சந்தனமோ
முகத்தில், உடலில் ஆங்காங்கே அரும்பும்
ஈரம்… மென்மையான ஒற்றலுடன் உறிஞ்சும்
பஞ்சுத் துவாலையே….என்னே உன்
நளினம்.., பாரபட்சம் இல்லை உன்னிடத்தில்
நான் இருக்கிறேன் என்றே அரவணைப்பாய்
நாடும் எவரையும்… குழந்தை முதல்
பெரியோர் வரை அனைவரும் உன் வசமே!
பாபா.மீரா