படம் பார்த்து கவி: ஸ்ட்ராபெர்ரியை

by admin 1
35 views

ஸ்ட்ராபெர்ரியை காணும் போதெல்லாம்
உன் தேன் இதழ்கள் தான்
ஞாபகத்திற்கு வருகின்றன
சில நேரங்களில் புளிப்பாக இருந்தாலும்
சலித்து போவதில்லை
சில நேரங்களில் இனிப்பாக இருந்தாலும்
திகட்டி போவதில்லை
உன்னை போல।
மொத்தத்தில்
முத்தமாய் ஏங்கும்
முக்கனியை விட
உயர்ந்தது என்பேன்
ஏனெனில்
மணக்கும் அதன் வாசனையிலும்
உன் நினைவுகளை சுவாசிக்கிறேன்!

-லி.நௌஷாத் கான்-

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!