தேவையான பொருட்கள்:
- பழுக்காத பப்பாளி – 1 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
- கடலைப்பருப்பு – 3/4 கப்
- மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
அரைப்பதற்கு
- தேங்காய் – 3/4 கப்
- சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
- வரமிளகாய் – 3
- மசாலா தூள் – 3/4 தேக்கரண்டி
தாளிப்பதற்கு
- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- கடுகு – 1 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:
- முதலில் கடலைப்பருப்பை நீரில் 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் தண்ணீர் ஊற்றி, நன்றாக கழுவிய கடலைப்பருப்பை 15-20 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைத்திட வேண்டும்.
- கடலைப்பருப்பு ஓரளவு வெந்ததும், அதில் பப்பாளியை சேர்த்து மூடி வைத்து 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
- அடுத்து அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.
- பின் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து பேஸ்ட் செய்துக் கொள்ள வேண்டும்.
- அதை பப்பாளியுடன் சேர்த்து நன்கு கிளறி 5-8 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
- அதற்குள் மற்றொரு அடுப்பில் கொஞ்சமாய் எண்ணெய் ஊற்றி தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து பப்பாளி கலவையுடன் சேர்த்து கலந்து இறக்கிட வேண்டும்.
- பப்பாளி கூட்டு ரெடி.