வருந்தச் செய்தினும்
வரம்புமீறி வஞ்சிக்கும்
வார்த்தை கொட்டினும்
வயதில் மூத்தோனவனானால்
ஒருமை அழைப்பு
பண்பற்ற துவர்ப்பென
கற்பித்த அப்பா
மறைந்தபின்னும் மனதில்கொள்கிறேன்
தந்தை சொல்
மந்திரத்தால் அல்ல
தந்தை செய்கை
தளிர்மனதில் சுடரானதால்!
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி: வருந்தச்
previous post