கடவுளிடம் ஐந்து கேள்விகள் கதைப்போட்டி: ஏன் படைத்தாய்

by admin 2
12 views

எழுதியவர்: திவ்யாஸ்ரீதர்  

கேள்வி 1: இறைவா, இந்த உலகில் பெண்களை ஏன் படைத்தாய்?

இறைவா, என் உள்ளத்தில் எழும் முதல் கேள்வி, உனது படைப்பில் பெண்களுக்கான நோக்கம் என்ன என்பதே. இந்த உலகில் ஏன் பெண்களைப் படைத்தாய்? 

இந்தக் கேள்வியைக் கேட்பதற்கான காரணம், தினம் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது என்பதேயாகும். 

கருவில் இருக்கும்போதே அழிக்கப்படும் சிசுக்கள் முதல், பிறந்த பின் புறக்கணிக்கப்படும் பெண் குழந்தைகள், இளமைப் பருவத்தில் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள், பணியிடங்களில் ஏற்படும் தொல்லைகள், மணவாழ்க்கையில் அனுபவிக்கும் கொடுமைகள் எனப் பெண்களின் துயரங்களுக்கு முடிவே இல்லை போல் தெரிகிறது.

பெண்கள் என்பவர்கள் வெறும் தாய்மைக்கான கருவியோ, அல்லது ஆண்களின் அடிமைகளோ இல்லை என்பதை நாம் அறிவோம். அவர்கள் சமூகம், குடும்பம், பொருளாதாரம் என அனைத்திலும் சமமான பங்களிப்பைச் செலுத்தும் சக்திகள். ஆனால், ஏன் இந்தச் சமூகத்தில் அவர்களுக்கு எதிராக இத்தனை வன்முறைகளும், பாகுபாடுகளும் இழைக்கப்படுகின்றன? உன்னால் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும் ஒரு நோக்கம் இருக்கும்போது, பெண்களுக்கு எதிராக ஏன் இவ்வளவு துயரங்கள்? 

பெண் என்பவள் அன்பு, பாசம், அர்ப்பணிப்பு, வலிமை இவற்றின் மறு உருவம் என்றால், ஏன் அவர்கள் கண்ணீரும் வலியுமாக வாழ வேண்டியிருக்கிறது? இந்த வன்முறைகளில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும்? 

பெண்களின் உண்மையான படைப்பு நோக்கம் என்ன, ஏன் அவர்கள் இத்தகைய கொடுமைகளை அனுபவிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதை நான் உன்னிடம் இருந்து அறிந்துகொள்ள விரும்புகிறேன், இறைவா.

முற்றும்.

மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!