கடவுளிடம் ஐந்து கேள்விகள் கதைப்போட்டி: உயிரிழப்புகள் ஏன்

by admin 2
5 views

எழுதியவர்: நா.பத்மாவதி

கேள்வி 2:  விபத்துகளால் உயிரிழப்பு ஏன்?

இந்த கதை ஒரு மனிதனின் உள்ளக் குழப்பத்தையும், கடவுளிடம் அவன் நேரடியாகக் கேட்கும் கேள்விகளையும், கடவுள் தரும் ஆழமான ஆன்மிகப் பதில்களையும் கொண்டது. இது ஒரு உணர்ச்சி மிகுந்த, ஆழமான உரையாடல் கதை.

நடுநிசி, கடலில் ஒரு படகில் தனியாக ஒரு மனிதன்.

அவன் மனதில் கொட்டிக்கிடந்த கேள்விகள். இயற்கையின் கொந்தளிப்பும் மனித வாழ்வின் வலியும் அவனை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியது.

துயரம் தாங்காமல் அவன் விழிகள் மூடி இருந்தான்.

அப்போது, படகுக்குள் மிகப் பிரகாசமான ஒளி பரவியது.

திடீரென அந்த ஒளி ஒரு உருவமாகி நிதானமான குரலில்,

“மகனே அருண், உன் இருதயத்தில் உள்ள குமுறல்களை கேள். நான் பதிலளிக்கிறேன்.” என்றார்.

அருண் பயந்து அதிர்ச்சி கலந்த வியப்போடு “நீநீ…?” என இழுத்தான்.

“நானும் உன்னை போல ஒருவன் தான், நீ எப்போது உன்னை நினைக்கிறாயோ, அப்போது நான் பிறக்கிறேன்.”

என்றார். ” சரி உன் கேள்விகளை கேள் அருண்” என்றார்.

2. விபத்துகளால் உயிரிழப்பு ஏன்?சாலை விபத்து, தீவிபத்து, விழும் கட்டிடங்கள், இவை ஏன் நிகழ்கின்றன? உயிரிழப்புகள் ஏன்?” என்றான் அருண்.

“மனிதன் கட்டிய அமைப்புகள் தற்காலிகம். அவன் பாதுகாப்பு என்ற பெயரில் அவசரப்படுவது, கலப்பட பொருட்கள் உபயோகிப்பது, மற்றும் அலட்சியம் போன்றவைகளும் காரணம். ஒவ்வொரு விபத்தும் ஒழுக்கம், பொறுப்பு மற்றும் தருணத்தை மதிக்கும் பாடம். உயிரிழப்புகள் எப்போதும் ஒரு முடிவு அல்ல. அடுத்து இதுபோல தவறு நடக்க கூடாது என மற்றவர்களின் விழிப்புணர்வுக்கான அழைப்பு.”

என்றார் இறைவன்.

போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!