நவரச போட்டிக் கதை: பெருமிதம் 

by admin 2
201 views

பத்தாம் வகுப்பு பொது தேர்வு ,அந்த அரசு பள்ளியில் எல்லோரும் மும்முரமாக ஆங்கில தேர்வு எழுதி கொண்டு இருந்தனர் . ,,,,,,,,

எதோ சுமாராக படிப்பான் குமார்,சற்று நடுதர வர்க்கம் . அப்பா ஒரு சிறு பள்ளியில் ஆசிரியர் .தேர்வு எழுத செல்லும் முன் அப்பா கூறிய வார்த்தைகள் நினைவில் வந்தது . “ தெய்வ நம்பிக்கையோடு எந்த காரியத்தையும் செய் , நல்ல பலன் கிட்டும் “ என்று தினமும் அறிவுரை கூறி அனுப்பி வைப்பார், அன்றும் அப்படியே ,குமாருக்கு பின் பெஞ்சில் நாராயணன் ,,, படிக்கவே மாட்டான் , அவன் அப்பா பெரிய அரசியல் புள்ளி . எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்தான் அந்த பகுதியில் முக்கிய புள்ளி . நல்ல வசதி , பெரிய வீடு , ஏகப்பட்ட கொடுக்கல் , வாங்கல் , இது தவிர வட்டி தொழில் வேறு . நிறைய வீடுகள் , வாடகை வருமானம் வேறு . பிறகு அவன் ஏன் படிக்க வேண்டும் ?ஏதோ பேருக்கு பின்னல் ஒரு பட்டம் வேணும் , அதுக்கு தான் படிப்பு என்று நாராயணனின் அப்பா அடிக்கடி சொல்வதாக வகுப்பில் பந்தாகாட்டுவான் நாராயணன் .

அமைதியாக தெரு அறை, எல்லோரும் குனிந்த தலை நிமிராமல் எழுதி கொண்டு இருக்கையில் பின்னால் இருந்து மெல்லிய குரலில் “ டேய் , குமார் , இந்த LETTER WRITING எல்லாம் உன்னை பார்த்து எழுதி விட்டேன் .கடைசியில் முடிப்பது எப்படி ,, கொஞ்சம் தள்ளி உட்கார், நான் எழுதி முடித்து விடுகிறேன் “ என கூறியதும் சற்று கோப பட்டான் குமார் ,பேசாமல் எழுதிய பேப்பர்களை மறைத்த வாறு ஆழ்ந்த சிந்தனையில் எல்லா வினாக்களுக்கும் நன்றாக எழுதி முடித்து விட்ட காரண தினால் கண்களை மூடி இறுதி மணி அடிக்க காத்திருந்தான்

“ டேய் , குமாரு , கடைசியில் YOURS FAITHFULLY போடணுமா அல்லது SINCERERLY போடணுமா , சொல்லுடா , ப்ளீஸ் , “ என்று கெஞ்சும் நாராயணனின் குரல் கேட்டு மெல்லிய குரலில் “ YOURS IMMEDIATELY போட்டு முடிடா” என கூறி அறையில் மணி ஒலி சத்தம் கேட்டதனால் பேப்பர்களை மடித்து எழுந்து கண்காணிப்பாளரிடம் கொடுத்து விட்டு வெளியே வந்தான்

தேர்வு முடிவுகள் சில நாட்கள் கழிந்து வந்தது .நாராயணன் பள்ளியில் முதல் மாணவ னாக தேர்ச்சி என்ற சேதி கேட்டு குமார் ஒரு கணம் அழுதே விட்டான் என்றாலும் தனது தந்தையின் அறிவுரையை எண்ணி பெருமிதம் கொண்டான் . .என்றாலும் நம்மை பார்த்து எழுதியவன் முதல் இடம் ,,,,,,,

இதை எண்ணி எண்ணி இரவெல்லாம் அழுவான் குமார் . வீட்டில் குமாரின் அப்பா “ கவலை படாதே குமார் . நீ நன்றாகத்தான் எழுதி இருப்பாய் , எனக்கு தெரியும் , மேற்கொண்டு என்ன செய்யணுமோ செய், கடவுள் நம்மை காப்பார்” என கூறி வழக்கம் போல அவரது வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டார் அப்பா.

உன்வருடங்கள் உருண்டு ஓடின , குமாருக்கு அந்த ஊரில் ஒரு நூற்பாலையில் குமாஸ்தா வேலை கிட்டியது , எதோ சொற்ப சம்பளம் தான் . மன நிறைவோடு தினசரி வேலைக்கு சென்று வந்தான் .

அப்பாவுக்கு வயதாகி விட்டது , ஒய்வு பெற்று விட்டார் ,அம்மா மற்றும் அவனது மனைவி யுடன் அந்த சிறிய வீட்டில் வாழ்க்கை சக்கரத்தை ஓட்ட ஆரம்பித்தான் .

குமாரின் மனைவி யும் அவனை புரிந்து கொண்டு எதோ சொற்ப சம்பளத்தில் பக்கத்து தெருவில் ஒரு சிறிய ஆலையில் வேலைக்கு போக ஆரம்பித்தாள் .

தீடீரென அந்த ஊரில் புதிதாக ஒரு பெரிய மருத்துவ மனை திறக்க போவதாக அறிந்து அந்த மருத்துமனையில் எதாவது எழுத்தர் வேலை இருந்தால் மனைவியை அனுப்ப லாமே என்று எண்ணி மனைவியின் ஒப்புதல் பெற்று மறுநாள் மெல்ல அந்த மருத்துவ மனைக்கு சென்றார்கள் இருவரும்,

வாசலில் இருந்த வரவேற்பாளர் “ சார் , எங்கு எல்லாம் எங்க பெரிய டாக்டர் நாராயண் தான் முடிவு செய்ய வேண்டும், நீங்க ஓரமாய் உட்காருங்க :” என கூறியதும் குமாருக்கு பெரிய டாக்டர் நாராயணன் என்பவர் யார் என யோசிக்க தெரிய வில்லைபக்கத்துக்கு சீட்டில் உட்கார்ந்து இருந்த ஒருவர் குமாரிடம் “ சார் , இந்த டாக்டர் நாராயணன் நம்ம ஊர் காரர்தான் . உங்களுக்கு தெரியாதா “ என கூறிய வுடன் அவன் மனைவிடம் “ எங்கூட நாராயணன் னு ஒருத்தன் படிச்சான் , பரீட்சையில் என்னை பார்த்து கள்ள காப்பி அடிச்சான் , அவன்தான் எங்க பெரிய டாக்டர் போல “ என்று கூறியதும் அவன் மனைவி “ உங்க கூட படிச்சவரெல்லாம் டாக்டர் ஆயிட்டாங்க , ஹ்ம்ம் : என பெரு மூச்சு விட்டாள்.

சற்று நேரம் கழித்து அந்த மருத்துவ மனை ஊழியர் குமாரின் அருகில் வந்து “ சார் ,,,, உங்களை பெரிய டாக்டர் கூப்பிடு கிறார் “ என்று கூறியதும் மெல்ல எழுந்து மனைவிடம் “ நான் போய் உள்ளே பாத்துட்டு வரேன் “ னு கூறி மெல்ல அறை கதவை திறந்து டாக்டர் அறைக்குள் சென்றான் .உள்ளே அமர்ந்து இருந்தது வேறு யாருமல்ல , நம்மை பார்த்து காப்பி அடிச்சு பள்ளி முதல் மாணவனாக ஆனேனே அந்த நாராயணன் தான் . வெளி நாட்டில் எல்லாம் படிச்சு இப்ப பெரிய ஆளாகி விட்டான் என எண்ணி பெரு மூச்சு விட்டு “ வணக்கம் டாக்டர் ,,,, “ என கூறியதும் பதிலுக்கு டாக்டரும் “ சார் , வாங்க , உக்காருங்க முதலில், நீங்க குமார் தானே … என்னை தெரியலையா உங்களுக்கு ,, நான்தான் நாராயணன் …..” என்று கூறி யதும் குமார் அப்போதுதான் தெரிந்தது போல காட்டி கொண்டு “ சார் , இப்போதான் நினைவுக்கு வருகிறது , நாம பாத்து ரொம்ப நாளாச்சு “ என கூறி ஒரு வாறு அசடு வழிந்த வாறு “ நீங்க நலமாக இருக்கீர்களா , உங்க வீட்டு காரம்மா என்ன செய்யுறாங்க , பிள்ளைகள் எல்லாரும் எப்படி ? என NONSTOP ஆககேட்டதும் அதற்கு Dr நாராயணன் “ குமார் ,அதெல்லாம் அப்புறம் பேசலாம் …..

நீ இப்போ என்னை பாக்க வந்த காரணம் என்ன “ என்று கேட்கவும் அதற்கு குமார் “ என் மனைவிக்கு உங்க மருத்துவ மனையில் ஒரு வேலை வேணும் “” பதிலுக்கு நாராயணன் “ அப்படியா , ஒரு வாரம் கழித்து ஆஃபிஸில் பார்க்க சொல்லு , நான் ஏற்பாடு செய்து நல்ல பதில் கூறி விடுகிறேன் :” என கூறி அலை பேசியை எடுத்து பேச முற்பட்டான் .

இதற்கு மேல் இங்கிருந்தால் சரியல்ல என கருதி குமார் மீண்டும் ஒரு வணக்கத்தை போட்டு மெல்ல கதவை திறந்து போக முற்பட்டான் .அப்போது நாராயணன் அலை பேசியில் “ அப்பா , ரொம்ப நாள் கழித்து என் கூட பத்தாம் கிளாசில் படித்த குமார் இன்னைக்கு இங்க வந்தான் , அவன் மனைவிக்கு நம்ம ஹாஸ்பிடல் இல் வேல வேணுமாம் .விதி எப்படி எல்லாம் விளையாடுது பாருங்க அப்பா , பரீட்சை அன்னைக்கு நான் அவனை பாத்து எழுதி கடைசியில் எனக்கு தப்பா yours immediately னு எழுத சொல்லி கொடுத்தவன் இன்னைக்குஉதவி கேட்டு எங்கிட்ட வந்திருக்கான் , நல்ல வேளை உங்க அரசியல் செல்வாக்கினால் பரிட்சை எழுதிய அன்னைக்கு நாம விடை தாள்களை மாற்றி எழுதி நல்ல மார்க் வாங்கி யதன் காரணமாய் இன்னிக்கு நல்ல உயர்ந்த ஸ்டேட்டஸ் இல் இருக்கேன் , எல்லாம் உங்க செல்வாக்கு தான் காரணம்” என கூறி அலை பேசியை துண்டித்தான் .

அறை கதவு சரியாக மூடாத காரணத்தினால் உள்ளே பேசியது குமாருக்கு நன்றாக கேட்டது .ஓ வென்று மீண்டு ஒரு முறை கதறி அழ தோன்றியது குமாருக்கு அப்போது .சே , நாம் அழலாம் , ஆனால் அடுத்தவனுக்கு தெரியாமல் தான் இனி அழ வேண்டும் என கூறி வெளியே காத்திருந்த தான் மனைவியிடம் “ வாம்மா , இப்போதைக்கு இங்கு வேலை ஒன்றும் இல்லையாம் , நாம வேற இடம் தேடி கொள்ளலாம் “ என்று கூறி வீட்டுக்கு வந்து பாத் ரூமுக்கு சென்று மீண்டும் ஒரு முறை கதறி அழ ஆரம்பித்தான் . சற்று நேரம் கழிந்து முகத்தை துடைத்து இனி எக்காலமும் அழ கூடாது .

வாழக்கை யை இனிமேல் கற்று கொள்ள வேண்டும் என முடிவெடுத்தான் தனது ஐம்பதாம் வயதில் ..

மீண்டும் ஒரு முறை தனது தந்தையின் அறிவுரை யை எண்ணி பெருமிதம் கொண்டான் , வாழ்கின்ற வாழ்க்கை சாதாரண மாக இருந்தாலும் பரவா இல்லை என்று மீண்டும் வழக்கம் போல செயல் பட ஆரம்பித்தான் .உண்மை என்றாவது நிச்சயம் ஜெயிக்கும் என நம்பி இருக்கும் நடுத்தர வர்க்கம் குமார்

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள:

https://aroobi.com/14625-2/

You may also like

Leave a Comment

error: Content is protected !!