கான்கிரீட் காடுகளில் ஓடித் திரியும் உலோகமே!
உயர்வு தாழ்வு இரண்டும் ஒன்றாய் கண்டாயே!
இடுகாடு சுடுகாடு போல சமரசம் கொண்டாயே!
மின்சாரக் கண்ணனின் துணையுடனே எங்களை வென்றாயே!
காதலும் காமமும் ஊடலும் கூடலும் செய்தாலும்
தனிமையும் அழுகையும் கோபத்தையும் மௌனமாய் ஏற்றயே!
குழந்தையின் மகிழ்ச்சியும் இயலாதவரின் நன்றியையும் சமர்ப்பிக்கிறோம்!!
பூமலர்