படம் பார்த்து கவி:சபையில்

by admin 3
7 views

சபையில் வீசிய சோழியில்
வாழும் வம்சத்தின் மரியாதை
விதிகளைப் புரிந்து கொள்ளாத
நேர்மை சுழற்சியில் தோற்றது

நெஞ்சம் பொங்கிய கோபத்தில் கொந்தளித்தாலும் வீழ்த்த முடியாது
விழுந்தது பகடை மட்டுமே

இன்றும் நாம் அறியாத தீர்மானங்கள்,
நம்மிடம் கேட்கப்படாத முடிவுகள்,
வெறுமையாகச் சுழன்று வீழும்
வாழ்க்கை பகடையில்….

சபைகளில் மட்டுமல்ல …
வீட்டில், அலுவலகத்தில்
நட்பில், காதலில்…
தடைகளைத் தகர்த்து
சோதனையில் சுழன்று
விழும் நாம் …தருமத்தின் நிழல் போல
தர்மத்தின் மாயத்துடன் விளையாடுபவர்கள்

தருமத்தின் நிழல் போல
தர்மத்தின் மாயத்துடன் விளையாடுபவர்கள்

அவமானத்தையும்
கோபத்தையும்
அடக்கக் கற்றவர்கள்

முடிவில்,
சோழி வீழும் ஒலி
மனதில் முந்தி எதிரொலிக்கும்
வாழ்வில் நிழலாய் நழுவும்

நா.பத்மாவதி

You may also like

Leave a Comment

error: Content is protected !!