பசுமை நிறம் பூசி,
அழகுடன் கதவு நிற்க,
மூடிய நிலையில் கம்பீரம்,
கதவுகள் பல கண்டிருக்க.
உள்ளே என்னவோ மறைந்திருக்க,..
காதல் கதையோ, கனவின் உலகோ?
காலம் அதைத் திறக்குமா,?
அல்லது காத்திருக்கச் சொல்லுமா?
மௌனமாய் நிற்கும் கலை,
பச்சை நிறத்தின் பெருமை.
கருமை பூசிய கதவு..
கரும்பச்சை நிறத்தில்
கதவு அதுவோ கரும்பச்சை,
ஆழம் கொண்ட ரகசியம்.
மறைந்து கிடக்கும் நிழல் போல,..
மர்மம் அதனுள் மிளிரும்.
பூட்டிய அதன் உள் கனத்த மௌனம்,
காலத்தின் சாட்சியாய் நிற்கும்.
எண்ணற்ற கதைகளைச் சுமந்து,..
இன்னும் அது உறங்குகிறது…
திறக்கப்படாத அதன் மர்மம்,
கவர்ந்திழுக்கும் என் விழியை…
கரும்பச்சை நிறத்தின் அழகு,
காத்திருக்கும் ஓர் புது அத்தியாயம்.!
இ.டி.ஹேமமாலினி