அகத்தினுள் அமர்ந்து அண்டையில் காண்கையில்
பிரம்மாண்டமாகும் பூமியும்
பேரண்டத்திலமர்ந்து பெரும் தூரத்தில் பார்க்கையில் சிறுகோளமாய் தெரிகையில்
ஆழி சூழ்ந்த அகிலத்தில்
அணுவினும் சிறுத்த இவ்வுயிருக்குள்
ஆக்ரமிக்கும் வலியும் அரையடி விழி தள்ளி ஆராயப்பட்டால்
வழியை மறைக்கும்
வருத்தும் வலியும்
விரலாய் புறந்தள்ளும்
சிறுதுகள் ஆகுமே!
புனிதா பார்த்திபன்
படம் பார்த்து கவி: அகத்தினுள்
previous post