படம் பார்த்து கவி: அடுத்தவனின் உழைப்பை

by admin 1
101 views

அடுத்தவனின் உழைப்பை அசிங்கபடுத்தாவன்
என்னில் அமர ஆசை
சத்தியத்தை மீறாதவன் என்னில்
உட்கார ஆசை
சிறந்த கல்வியை
வழங்குபவன்
என்னை ஆட்கொள்ள ஆசை
கள்ளசாராயம் எனும்
விஷத்தை காச்சாதவன்
என் மீது அமர ஆசை

ஆனால் எனக்கு தெறியும்
இது நிராசையே
மாறாக எனக்கு கிடைக்கும் பூசையே

பணத்திற்கும்
இலவசத்திற்கும்
அடிமை பட்டு இருக்கும்
எமது திரு நாட்டில்
நேர்மையை எதிர்பார்ப்பது
எவ்வித நியாயமும்
இல்லையே

மக்களே நீங்கள் மாறினால் முடியும்
எனது எதிர்காலம்
நல்லதாக அமைய

தனது குடும்ப நலனை பாராது
மது எனும் விஷத்தால் பல
தாலிகளை அறுக்காது
மனித நேயமிக்க
தலைவனை என்மீது
அமரவைத்தால்

ஆனால் இது எங்கே
நடக்க போகுது
உங்கள் அறிவு எனும்
கண் இருட்டில்
அடைபட்டு அல்லவா
கிடக்கிறது
நான் மட்டும்
ஆசை பட்டு
என்ன ஆக போகிறது

இறைவா
இவ் மானிட பதர்களின்
அறிவு எனும்
கண்களை திறந்து விடு
என் ஆசையை நிறை வேற்றிவிடு..,.
M. W. Kandeepan🙏🙏

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!