அந்திப் பொழுதில்
அறமற்ற போர்
அரவமின்றி அரங்கேறுகிறது
ஒளிக்கும் இருளுக்கும்
தன்னை வாளாக்கி
வெல்ல விழைகிறது மெழுகு
காற்றாயுதத்தை வீசி
கொல்ல சீறுகிறது இருள்
முற்பாதியில் ஓங்கும்
மெழுகின் கை
பிற்பாதியில் பின்வாங்குகிறது
போர்காரணமே அறியாது
களம் புகும்
கடைவரிசை வீரனாய்
கொடுத்த பணியை
முடிக்கும் முனைப்பில்
முழுதாய் மடிந்த மெழுகின் உருகியோடும் குருதியில்
சுடரும் உடன்கட்டை ஏறுகிறது
மாண்ட மெழுகிற்கு
சுற்றமும் இருண்டு
இறுதி மரியாதை செய்ய
வெற்றிக் களிப்பில் இருளின் முகம் இன்னும் இருளால் ஒளிர்கிறது
வெல்வதும் வெல்லப்படும் என்றறியா வெகுளியாய்!
புனிதா பார்த்திபன்
படம் பார்த்து கவி: அந்திப்
previous post