அழுகிறதோ மெழுகுதிரி வடி(க்)கிறதே கண்ணீராய்
முழுவதுமே மூழ்கிடினும் குறைத்திடுமோ ஒளிருதலை
ஒளிரச்செய்த கரமதுவும் விலகியிதை சென்றதுவோ!
வழிகிறதே விழிநிரம்பி விலகியதன் வலியதனால்
மொழியெதுவும் இல்லையிந்த உறவுதனை சொல்லிடவே
அழியாத ஆழ்ந்தன்பு ஒளிரச்செய்த கரத்தினிடம்
பழியெதுவும் பார்த்ததுவோ ஒளிர்வித்தே ஓடியதே
வழியெதுவும் உள்ளதுவோ கரத்தினது கரம்பிடிக்க
அழகழிந்தே கரைந்திடினும் ஓய்வின்றி ஒளிர்ந்திடுமே
ஒளிர்ந்திடவே ஒளிர்வித்த கரத்தினுக்கு நன்றியாக…
ஒளிர்ந்துருகும் விழியதனால் வழியதனை பார்த்துப்பார்த்து
அழியும்வரை காத்திருக்கும் கரமதனின் வரவினுக்காய்!!
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா ஜே ஜெயபிரபா_
படம் பார்த்து கவி: அழுகிறதோ
previous post