படம் பார்த்து கவி: இடையோ

by admin 3
2 views

இடையோ அது இல்லையோ எனும்
கொடியிடைதனை சிகப்புக் கரையிட்ட கருப்புச்
சேலை தழுவியிருக்க…. எனக்கும் உன்
இடையொடு விளையாட ஆசை…. மின்னும்
ஒட்டியாணச் சலங்கைகள் துதி பாட
அழகாய் அன்னநடை பயின்று வந்தாளே
பாவையவள்…. குழப்பம் எனக்கு மொத்தத்தில்
எந்த அழகை ரசிப்பது என்பதில்..,

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!