இதழ்களின் குவியல் நீ
நிறங்களில் உன் குளியல்
ஏந்திய உடலது. காம்பு
இறைவனிடத்தில் பக்தியாய் நீ
குழலில்சூடிட அழகுக்குகழகானாய் நீ…..
மணமக்கள் கையில் பூச்செண்டாக
மலர்மாலையில் வாசம் தரும்மலராக
எத்தனை எத்தனை அவதாரங்கள்
பெண்களைபோலவே பூக்களின் ராணியே..
நீகொண்டமுள்போல மனங்களிலும்
முள்ளுண்டு
உன் முள் உனைகாக்கும்
மனம்கொண்டமுள் பிறமனதினை தாக்கும்..
_மித்ரா. சுதீன்