படம் பார்த்து கவி: இருகரம்

by admin 3
103 views

இருகரம் கூப்பியே விண்ணிடம் வேண்டுதல்
வைத்தனையோ பூமி தேவதையே…. கூந்தலை
அலங்கரிக்கும் ஒற்றை வண்ண ரோஜா
எனக்கு மட்டும் என்ன குறைச்சலாம்..,
கைகளோடு பிணைந்தே மெல்லிசை
படைத்திடும் வளைகள்…. பெண்ணே நின்
அதிரூப சுந்தரந்தனில் மயங்கித் திரண்ட
கார்மேகங்கள் முன்னே உன்னை நனைத்துப்
பின் பூமியில் துளிகளாய் வீழ்ந்தனவோ?

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!