இளம் சிவப்பு நிற ராணி
சுழலும் காலச்சக்கரத்தில்
மாறிடும் காட்சிகள் எல்லாம்
மாயையின் திரைக்காட்சி
மண்ணில் நாம் பொம்மையல்லவா?
நம்பிக்கையின் நூலிழையில்
நாளைகளை நோக்கிப் பயணம்
அன்பெனும் கயிற்றால் பிணைந்து
வாழ்வெனும் விளையாட்டாடுவோம்!
விதி வரும் வழியினில்
மனம் தளராமல் நிற்போம்
சவால்களைத் தாண்டிடுவோம்
புது வாழ்வு படைத்திடுவோம்!
பொம்மையாய் இருப்பினும் நாம்
உணர்வுகளின் ஊற்றல்லவா?
சிரிப்போம், அழுவோம், நேசிப்போம்
மனிதத்தின் மாண்பு இதுவல்லவா?
காலத்தின் கைகள் நம்மை
ஆட்டிப் படைத்தாலும் கூட
நம் கையில் தான் உள்ளது
வாழ்க்கையை அழகாக்கிக் கொள்ளும் திறமை!
இ.டி. ஹேமமாலினி
படம் பார்த்து கவி: இளம்
previous post