படம் பார்த்து கவி: உன்னை

by admin 3
0 views

உன்னை விட்டு நானும்
வேறு எங்கு போவேன்
எண்ணெய் விட்டு உன்னை
பொரித்து எடுத்த போது
ஐந்து புனலும் தன்னாலே
அசையுறுது உன்னாலே
உன்னை பார்க்கும் போதே
நாவில் நீரூற்று தன்னாலே
நாசியில் நுகரும் போது
தேகம் தளருது தன்னாலே
மொறு மொறுவென்று ஓசை
ரீங்காரம் இசைக்கும் பாசை
அறுசுவை அறியும் நாவும்
உன் சுவை அறிய நாடும்

சர் கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!