குட்டி காலுறை 🧦
(ஒரு குழந்தையின் பார்வையில்)
கடுங் குளிர் காலையில்
கனிந்த வெயிலாய் வருவாய்
மெல்ல சுருண்ட மெத்தையாய்
கால்களை முத்தமிட்டு காத்திடுவாய்
தெருவில் தடுக்கித் தடுமாறி,
முரட்டு தரையில் நடக்கையில்
பாதையைக் கனிவாய் மாற்றி
பாதுகாப்பாய் என்னைக் தாங்கிடுவாய்
பல வண்ணம் கொண்ட
வானவில் மேகப் பூமாலையாய்
மலரின் மென்மை தந்திடும்
நீ நிழலாய் என் காலடியில்…
பள்ளித் தோழனாய்
பந்தாடும் வீரனாய்
துணை நின்று காக்கும்
என் குட்டிக் காலுறைத் தோழனே,
உன்னை மறக்கவே மாட்டேன் –
நீயே என் ஹீரோ
நா.பத்மாவதி
படம் பார்த்து கவி: குட்டி
previous post