படம் பார்த்து கவி: குழந்தையின்

by admin 3
2 views

குழந்தையின்  வாய்க்குள் உருகும் வெண்மைச் சந்தனம்
மழைத் தூறலாய் பாயும் பால் புட்டி
அம்மா அன்போடு ஊற்றிய பால்
அப்பா முறுவலோடு கொடுத்த புட்டி
மடியில் படுத்து மெல்லத் தூங்கும்
விழித்த விழகளின் சந்தோஷம் சுழலும்
அது வெறும் உணவல்ல
புட்டியின் நடுவே பால் பாசம்
மெல்ல மெல்ல கடித்த நேரம் மனம் நிறைந்த பெருமை மகழ்ச்சி
பாலின் வெண்மை கோலம்
குழந்தையின் நறுமண வாசம்
வாழ்க்கை முழுதும் நெஞ்சில்
மிதக்கும்  மிதவையாக
மழலைப் பருவம்

நா.பத்மாவதி

You may also like

Leave a Comment

error: Content is protected !!