சிதறிக்கிடக்கும் டாரோ அட்டைகள் எதிர்காலத்தின்
முன்னறிவிப்பாளர்களாம்…. கணிப்பதற்கு யாரோ எதற்கு?
அவரவருக்கான ஆயுளும், விதியும் எப்போதோ
எழுதிவிட்டான் சித்திரகுப்தன்… வாழ்வில்
அதிர்ஷ்டமோ துரதிர்ஷ்டமோ அவன் போடும்
கணக்கே … கட்டங்கள் அல்ல.. வெற்றிகள்
வசப்பட தேவை துவளா முயற்சியே!
தாயக்கட்டை/சீட்டு விளையாட்டுகள் மட்டுமா
கண்மூடி கட்டங்களும், அட்டைகள் கொண்டே
எதிர்காலம் நோக்குதலும் சூதாட்டமே அன்றோ?
சூதுகவ்வும் மானிடர் உணர்வது என்றோ?
நாபா.மீரா
படம் பார்த்து கவி: சிதறிக்கிடக்கும்
previous post