சிரமம் பாராமல் பாரங்களை ஏற்றியும்,
இறக்கியும் உதவிடும் நீ உண்மையில்
ஒரு சுமைதாங்கிதான்… காலங்கள் உன்
மேல் அள்ளித் தெளித்த கோலங்களில்…
இன்று டச் போன் கணக்கில்
ஸ்மார்ட்டாய் வலம் வரும் நீ
செய்யும் தொழில் என்னவோ சுமப்பதும்
இறக்குவதும்தானே…..பாரம் அதிகரித்தோ…..
மின்சாரம் வேலைநிறுத்தம் செய்தாலோ
அந்தரத்தில் நின்று வயிற்றில் புளி
கரைத்திட உன்னையன்றி யார் உளர்?
நாபா.மீரா