படம் பார்த்து கவி: சிறுத்தை

by admin 3
21 views

சிறுத்தை ஒன்று புகலிடம் தேடி
காடழித்த கொடுமை கண்டு,
நாடடைந்த நயனம் நொந்து.
அடப்பாவிகளா, என்ன செய்தீர்?
காட்டையும் கெடுத்தீர், நாட்டையும் கெடுத்தீர்!
ஒற்றுமையில்லாத உங்கள் வாழ்வு,
குனிந்த தலையில் விரல் காட்டும் கூத்து.
வீணாய்ப் போனதே உங்கள் பொழுது,
அழிபசிக்குத் தின்னக் காய் கனியுமில்லை.
எங்கு நோக்கினும் கான்கிரீட் காடு,
நாசமாய் ஆனதே நரக வாழ்க்கை.
நிலைகுலைந்து விழிகள் விரிய,
சிறுத்தை ஒன்று பார்க்குதே பரிதவித்து!

இ.டி.ஹேமமாலினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!