படம் பார்த்து கவி: சிவப்பு

by admin 3
6 views

சிவப்பு ரோஜாக்கள் பியானோ மேலே,
சிரிக்குது பார்… பனித்துளி ஜொலிக்கையிலே!
இதழ்கள் விரிந்து இசைக்காகக் காக்குது,
காதல் ராகம் வருமென்று நம்பி இருக்குது!
ஒவ்வொரு ரோஜாவும் ஒரு கதை சொல்லும்,
மெளனத்தின் மொழியில் கவிதை பாடும்!
கருப்பு வெள்ளை கம்பி மீது சிவப்பின் சாட்சி,
அழகான ஓவியம், மனது சாந்தமாச்சு!

இ.டி.ஹேமமாலினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!