படம் பார்த்து கவி: சுகமான

by admin 3
14 views

சுகமான சுமைகள்
மூன்று முடிச்சில் தொடங்கிஅம்மியும்,
அருந்ததியும் சாட்சியாய் உருவாகிடும் பந்தம்…
ஆணும், பெண்ணும்.. உமையொரு பாகனாய்
பாரங்கள் சுமப்பதிலும் சரிபாதியாய்
இருந்திட்டால் சுமைகள் சுகமே அன்றோ?
பிரிதலில் இல்லை வாழ்க்கை இரு
மனங்களின் புரிதலில்தான் உணர்ந்தால் நன்றே….
விட்டுக் கொடுத்தலும் சற்றே இலகுவாய்
விட்டுப் பிடித்தலும் நிறைவான வாழ்வின்
சூட்சுமம் அன்றோ? இணையோடு இணைந்தே
அன்பினைப் பகிர்வோம்! திரும்பப் பெறுவோம்!

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!