சுடுவது நெருப்பு தண்ணென்று
குளிர்வது நீரன்றி வேறென்ன?
முட்டுவது மாடு எனில்
கொட்டுவது தேளின் இயல்பே!
கொடுக்கில் விடம் ஏந்தி
நொடிக்குள் குடித்திடும் உயிரை
வார்த்தைகளில் வீரியமும் தாக்குமே
உணர்வுகளை யாகாவாராயினும் நாகாக்க….
விடமே ஆயினும் பிறிதொரு
விடம் முறிக்கும் மருந்தாய்….
நல்லவை மட்டுமல்ல அல்லவையும்
சக்தியே உணர்வீர்! பயனடைவீர்!
நாபா.மீரா
படம் பார்த்து கவி: சுடுவது
previous post