செவ்வானம் செவ்வி சிரிக்க…
முள்ளின் போர்வையில்
அழகிய முள்ளெலி…
இயற்கையின் அழகை
ரசிக்குது கரையில்…
மறையும் சூரியன் அந்தி பொழுதை கூற…
காற்று மெதுவாய்
வீசி செல்ல…
தண்ணீர் பிம்பத்தை
உருவத்தை பிரதிபலிக்க…
மின்னும் விழிகளோடு அமைதியாய் கரைந்தது நேரம்.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: செவ்வானம்
previous post