படம் பார்த்து கவி: சோறு

by admin 3
1 views

சோறு கண்ட இடம் சொர்க்கமாகுமாம்
வேறு தேவை ஏதுமில்லையோ வாழ்ந்திடவே
உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோராம்
உயிரின் தேவை உணவே தானோ
இறவாதிருக்க மூச்சுக்காற்றது முக்கியம் போலே
இயல்பாய் இயங்கிட உணவும் வேண்டுமே
உடல் இயங்க உணவு என்றால்
உள்ளம் இயங்க உள்ளன்பு தேவையறிவீரோ
தன்னலம் கருதி தானியம் விதைத்தால்
தரணியுளோர் யாவரும் உண்டிட கூடுமோ
உலையில் அரிசி சமைப்பவர் எவரும்
விலையில்லா அன்பையும் சமைத்தே தருகிறதால்
உடலும் உயிரும் உணர்வாய் ஆகிடுதே
உண்ணும் பொழுதெல்லாம் உணவை தாண்டியே
உன்னல் வேண்டுமே உணவாக ஆக்கியவரை

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!