படம் பார்த்து கவி: துள்ளி

by admin 3
1 views

துள்ளி குதித்து காளை ஒன்று பாய்ந்து ஓடி வருகுது…
குத்தி கிழிக்கும் கொம்புக்கு நடுவில் கூரான பார்வை துளைக்குது…
நிலத்தில் கால்கள் சீறிப்பாய, களத்தில் வருவான் கோமகனே…
இளசுகள் ரத்தம் சூடு பறக்க,
ஆட்டம் இங்கு தொடங்குது…
உறுதியான கைகள் இறுக்கமாய் பற்ற,
வீரத்தின் சின்னமாய் ஜல்லிக்கட்டு ஆனது.
மண்ணின் மைந்தன் திமிறிப் பாய,
மார்தட்டிப் போரிடும் மாவீரன் வெல்ல…
தமிழனின் விளையாட்டு
தலைநிமிருது.

திவ்யாஸ்ரீதர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!