தேன்குடுவையைச் சுற்றும் தேனீக்கள்
தேன்குடுவைச் சுற்றி சுற்றி வட்டமிட்டு
தீண்டினால் இசை ஒலிக்கப் பறக்கும்
உறவுகளைச் சுமந்த தேனீக்கள் வனப்புடன்
ஞாயிறு ஒளிப் பரவி விட்டால்
சுறுசுறுப்புடன் பணிக்குக் கிளம்பும்
மலர்முகங்கள் தேடி தேனமுது சேகரித்து
மகரந்தம் சேர்க்க உழைக்கும் கைகளுக்கு ஒன்றிணைந்த இசையாக இயங்கும் இறக்கைகள்
மலரின் மணமும் தேனின் சுவையும்
தேடித் திரியும் அந்தச் சிறு உயிர்கள்
மனிதன் மகிழ்ந்து உண்பான், வாழ்வான்
ஆனால் அதை மறந்து விடுவான்
அழிவைத் தடுக்க ஆராய்ச்சி செய்யும்
ஒற்றுமையால் உருவாகும் அற்புதங்களை
பகிர்ந்து வாழ்ந்தால் பெருக்கம் உறுதி
பூமிக்கு தேவையான பாடம் இது.
தேனீ வாழ்க்கை மனிதனுக்கு வழிகாட்டி என நினைவூட்டும் தேன்குடுவை…
நா.பத்மாவதி
படம் பார்த்து கவி: தேன்
previous post