தையல் மெஷின் கண்டால்
கண்கள் குளமாகுது அம்மா
எத்தனை இரவுகள் நீயும்
மெஷினில் கண் விழித்து
கதை பேசி இருப்பாய்
யார் மீது கோபங்கொண்டாலும்
மெஷினை தானே மிதித்திருந்தாய்
மிதிபட்ட மெஷினும் உன்
கையை ஊசியால் குத்தியே
வஞ்சம் தீர்த்தது பலநாள்
உதைபட்ட போதும்
உணவு அளித்தது இந்த உறவு
தையல் மெஷின் கண்டால்
கண்கள் குளமாகுது அம்மா
தையல் தப்பி போனால்
பிரித்து எடுப்பது தான் என் பணி
எதிர் வீட்டு விஜயா உடை என்றால்
தையல் தப்ப வேண்டும்
என்று எத்தனை நாள் காத்திருந்தேன் கடவுளை வேண்டி இருந்தேன்
தையல் மெஷின் கண்டால்
கண்கள் குளமாகுது அம்மா
சர் கணேஷ்