படம் பார்த்து கவி: தையல்

by admin 3
9 views

தையல் மெஷின் கண்டால்
கண்கள் குளமாகுது அம்மா
எத்தனை இரவுகள் நீயும்
மெஷினில் கண் விழித்து
கதை பேசி இருப்பாய்
யார் மீது கோபங்கொண்டாலும்
மெஷினை தானே மிதித்திருந்தாய்
மிதிபட்ட மெஷினும் உன்
கையை ஊசியால் குத்தியே
வஞ்சம் தீர்த்தது பலநாள்
உதைபட்ட போதும்
உணவு அளித்தது இந்த உறவு
தையல் மெஷின் கண்டால்
கண்கள் குளமாகுது அம்மா
தையல் தப்பி போனால்
பிரித்து எடுப்பது தான் என் பணி
எதிர் வீட்டு விஜயா உடை என்றால்
தையல் தப்ப வேண்டும்
என்று எத்தனை நாள் காத்திருந்தேன் கடவுளை வேண்டி இருந்தேன்
தையல் மெஷின் கண்டால்
கண்கள் குளமாகுது அம்மா

   

சர் கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!