பகட்டாக பளபளக்கும் வதனம்
அரிதாரத்தில் அழகான தேகம்
உதட்டுச்சாயம் பூசிய முகம்
இவைதான் நவ நாகரீகம் என்று
நிலை தடுமாறும் இளம் சமூகத்திற்கு
நற்சொல் கூறும் நாவுக்கும்
மையிட்ட கண்ணிலே கனிவும்
வஞ்சனை இல்லாத வாஞ்சையும்
உலகில் இளமை மாறாமல்
இன்றளவும் இயங்க காரணம்
சர் கணேஷ்