படம் பார்த்து கவி: பச்சை

by admin 3
1 views

பச்சை பசேலென அடர்ந்து வளர்ந்து
பரந்து விரிந்த மரம் செடிகளும்
பழமும் காயும் பறிக்க வரும்
பலவகை பறவை விலங்கின் இனங்களும்
குளங்களும் மலைகளும் நிறைந்த நிலங்களும்
வளமையும் செழுமையும் வழங்கின இடங்களும்
தடங்கலே இல்லாமல் தரைமட்டமாக்கி விட்ட
தளங்களில் தானிந்த வானுயர்ந்த கட்டிடங்கள்

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!