படம் பார்த்து கவி: பச்சை

by admin 3
16 views

பச்சை பசேலென
வளமையும் செழுமையும்
இச்சை இலாதோரையும்
இச்சிக்க செய்திடுமே
இச்சகத்திலே
எச்சமேதும் இலாதே
துச்சமாக்கியே
உச்சமிதுவெனவே
மிச்சமும் இன்றியே
நச்சாக்கியே
உயர்வென்றே உயிரளிப்பவற்றை உயிர் அழிக்கின்றோமே…!
துயரன்றோ!!
தேடுகின்றோம் தழையழித்தே தலைமுறையினையே..
நிகரில்லா நிலத்தின்
செழுமை நீ(க்)ங்கியபின்
நிசத்திலோ
நினைவிலோ
நின்றிடுமோ!? பசுமையுமே…!
பசிக்குணவும் வசிப்பிடமும்
இயல்பழிந்தே இயங்கிடுமோ?!
ரசித்திடலாம்
செயற்கை அறிதிறன் வழியிதனை!!

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!