பளபளக்கச் செய்யும் பொருட்கள் இவை,
தூய்மைக்கு வழி வகுக்கும் துணையிவை.
கைஉறைகள், தெளிப்பான் பாட்டில்கள், பிரஷ்கள், நுரைக்கும் சோப்புகள்.
ஒவ்வொன்றும் அதனதன் வேலையைச் செய்ய,
இல்லம் மின்னும், மனம் நிம்மதியுறும்.!
கிருமிகளை விரட்டி, அழுக்கைப் போக்கி,
புதியதோர் அழகைத் தினமும் கூட்டி.
சுகாதார வாழ்வுக்கு இவை ஒரு அஸ்திவாரம்,
தூய்மையே சிறந்த வாழ்வின் ஆதாரம்.
இந்தக் கருவிகள் இல்லையெனில்,
எப்படி இப்புவி சுத்தமாகும்?
மகிழ்ச்சி பெருக, நோய்கள் மறைய,
சுத்தமே துணை, இது நித்திய உண்மை!..
இ.டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி: பளபளக்க
previous post